மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதாவது கைலாசா நாடு எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது? நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாச நாட்டுக்கு செல்வதற்கு விசா பாஸ்போர்ட் வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.

இதற்கு நித்தியானந்தாவின் தரப்பில் ஆஜாரான அவரது சீடர் அர்ச்சனா ஆஸ்திரேலியா அருகே யு எஸ் கே என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு என்றும் கூறினார். நித்தியானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரின் நியமிக்க அனுமதி கோரினார். இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கை ஒத்தி வைத்துள்ளது.