
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் தினமும் வித்தியாசமான பிண்டிகளை(பொட்டு) வைக்க ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் தனது கணவனிடம் புதிய பிண்டிகளை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரால் வாங்கி கொடுக்க முடியவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் தனது கணவன் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
அதன் பின் அவரிடம் விவாகரத்தும் கேட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து காவல்துறையினர் அந்த தம்பதியை குடும்ப நல ஆலோசனை மையத்தில் ஆலோசனை பெற அறிவுறுத்தினர். அதன்படி அந்த தம்பதியும் ஆலோசனை பெற்றுள்ளனர். காவல்துறையினர் கூறுகையில் “இது போன்ற அசாதாரண வழக்கு பதிவாகுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கணவர் மோமோஸ் வாங்கி தர மறுத்ததால் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன் பின் கணவன், மனைவிக்கு வாரம் இரு முறை மோமோஸ் வாங்கி தருவதாக உறுதியளித்தார்” என்று கூறியுள்ளனர்