பிரிட்டனைச் சேர்ந்த 70 வயது டிசி ஹாட்சன், மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடராக வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை அவர் 48 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார், ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து அவர் பல முறை யோசித்ததுண்டு. அனால் தற்போது தான் அதற்கான காரணம் அவர் அறிந்திருக்கிறார்.

அந்த விண்ணப்பம், ஒரு தபால் அலுவலக டிராயரின் பின்னால் சிக்கியிருந்தது. அப்போதுதான் அதிகாரிகள் அதை கண்டறிந்து, டிசிக்கு அவரது விண்ணப்பத்தை மீண்டும் அனுப்பியுள்ளனர். இது அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இதுகுறித்து டிசி கூறும்போது, “எனக்கு பதில் ஏன் வரவில்லை என்று வியப்பாக இருந்தது. ஆனால் இப்போது தான் உண்மையான காரணம் என்ன என்று புரிகிறது,” எனக் கூறியுள்ளார். தாமதமாக இருந்தாலும், இந்த விண்ணப்பம் மீண்டும் கிடைத்ததற்கு அவர் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டுள்ளார்.