அமுல் நிறுவனம் திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது குறித்து எழுந்த சர்ச்சை மத்தியில், அமுல் நிறுவனம், “எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய் பால் கொழுப்பிலிருந்து மட்டுமே உருவாக்கப்படுகிறது” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அமுல் நிறுவனம் தனது நெய் தயாரிப்பு முறைகள் மிக உயர்ந்த தரமானதாகவும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற உற்பத்தி நிலையங்களில் உருவாகி, FSSAI விதிமுறைகளை பின்பற்றுகிறது என்றும் கூறியுள்ளது. அவற்றில் எந்தவித மாட்டுக் கொழுப்பு கலப்பு இல்லையெனவும், நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுவதாலேயே விலங்குகளின் கொழுப்பு பற்றிய குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளது.

இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அமுல் நெய் சப்ளை இதுவரை நாங்கள் செய்ததில்லை எனவும் இதுதொடர்பாக எந்த தவறான செய்தியும் பரப்ப  வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.