தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டி இடுவதாக அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது, பெரியார் தான் எங்கள் கொள்கை தலைவர். ஆனால் அவர் கூறிய கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ‘ஒன்றே குலம் ஒருவரே தெய்வம்’ என்பது எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு, சிந்தனை பெண்கள், முன்னேற்றம் சமூக நீதி உள்ளிட்ட பெரியார் சொன்ன அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம்.

பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர் தான் எங்களுடைய வழிகாட்டி. எங்களுடைய கொள்கை தலைவர் தான் அண்ணா அம்பேத்கார், சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவர்கள் அம்பேத்கர் பெயரை கேட்டாலே நடுங்குவார்கள். அதன்படி அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்ற முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான். அந்த வகையில் நமது மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலு நாச்சியாரும், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலை அம்மாள் ஆகிய இருவரும் நம்முடைய கொள்கை தலைவர்கள் என்று அவர் கூறினார்.