
கோவில் பிரசாதங்களுக்கு எப்போதும் தனி பக்தர்கள் உண்டு. அதேபோன்று கோவில் பூசாரிகளுக்கும் பிரசாதம் மீது விருப்பம் உண்டு. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோவிலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது அந்த கோவிலில் உள்ள பூசாரி ஒருவர் கூடுதலாக இரண்டு லட்டுக்களை பிரசாதமாக எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.
उत्तर प्रदेश –
जिला फतेहपुर में पुजारी जी ने प्रसाद से 2 लड्डू ज्यादा निकाल लिए तो भक्तों ने उनकी कुटाई कर दी। पुलिस ने FIR दर्ज कर ली है।@bnetshukla pic.twitter.com/OvhOmaCiam— Sachin Gupta (@SachinGuptaUP) June 18, 2025
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆண் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பூசாரியை சரமாரியாக தாக்கி முடியை பிடித்து இழுத்து அடிக்கின்றனர். இதனை அங்கிருந்த பெண்கள் தடுக்க முயற்சி செய்த போதும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.