அசர்பைஜானில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், அங்கு நடைபெற்ற பாகிஸ்தான்-துருக்கி-அசர்பைஜான் திரைமுக மாநாட்டில் பேசிய போது, இந்தியாவுடன் தொடர்புடைய மிக முக்கியமான ரகசியத்தை தன்னறியாமல் வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுகளால், பாகிஸ்தான் இந்தியாவை எதிர்த்து ஒரு போர்க்கால தாக்குதலை திட்டமிட்டிருந்ததும், அதனை இந்தியா முன்கூட்டியே எதிர்த்துத் தடுக்க BrahMos ஏவுகணைகளைக் கொண்டு முக்கிய பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கியது என்றும் தெரியவந்துள்ளது.

 

ஷரீப் வெளியிட்ட தகவலின் படி, பாகிஸ்தான் ராணுவம், மே 6-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு, Fajr தொழுகைக்கு பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குமுன் இந்தியா தனது உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான நிலையம் மற்றும் சக்குவாலில் உள்ள முரீத் தளங்களை BrahMos ஏவுகணைகளால் தாக்கியது என ஷரீப் கூறினார். இதனால் பாகிஸ்தானின் பூர்வ திட்டம் முற்றிலும் வீழ்ந்தது.

இந்தியா திடீரென தாக்குதல் நடத்த காரணம், அவரது சொற்றொடரில் “இந்தியாவின் அக்ரஸிவ் அணுகுமுறைதான்” எனக் கூறிய ஷரீப், “அப்போது நாங்கள் பதிலடி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை” எனவும் விளக்கினார். மேலும், நிலைமை மோசமடையக்கூடாது என ராணுவத் தலைவர் அஸீம் முனீர் வழங்கிய ஆலோசனைக்கு உடன்பட்டதையடுத்து, மே 10ம் தேதி இருதரப்பும் ஒரு இரண்டாம் கட்ட மோதலை தவிர்த்து, தாக்குதல்களை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஷரீப் தற்போது துருக்கி, அசர்பைஜான், ஈரான் மற்றும் தாஜிகிஸ்தான் நாடுகளில் ‘நன்றி பயணத்தில்’ ஈடுபட்டு வருகிறார். இந்த நாடுகள் இந்தியா-பாகிஸ்தான் மோதல் காலத்தில் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த தகவல்கள் அனைத்தும், இந்தியாவின் நடவடிக்கைகள் முன்னோடியாகவும் திட்டமிடலுடன் செயல்பட்டதாகவும், பாகிஸ்தானின் ரகசியங்களை பிரதமர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உறுதி செய்கின்றன.