பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே செல்கிறது. எனினும் இப்போது இந்த தவணையில் ரூ.2000 விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் விடுவிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த ரூ.2000 தொகை நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரையிலும் தங்களது நில ஆவணம் சார்ந்த தகவல்களையும், இ-கேஒய்சி தகவல்களையும் பதிவுசெய்யாத விவசாயிகள் இந்த 13வது தவணையைப் பெற இயலாது. முன்பாக விவசாயிகளின் கணக்கில் இதுவரை 12 தவணைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.