
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் யாத்திரைப் பாதையில் அமைந்துள்ள சீதாபூர் வாகன நிறுத்துமிடத்தில், வியாழக்கிழமை காலை பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கடும் தடியடியாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டு, இதில் தொடர்புடைய ஐந்து இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Kalesh b/w Pilgrims with each other in Sitapur parking on the Kedarnath Yatra route, attacked each other with sticks.
pic.twitter.com/qD9KSr3cMx— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 19, 2025
போலீசார் விசாரணையில், ஒரு சிறிய விவாதம் பயணிகள் மற்றும் பார்க்கிங் ஊழியர்கள் இடையே ஏற்பட்டதாகவும், அது தகராறாக மாறி தடியடி நிலைக்கு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதில் தொடர்புடையவர் உள்பட, பஸ்தி, தர்மோலா, கோட்வாலி ருத்ரபிரயாக், சுதர்ஷன் சந்திரா, பார்த்பூர் கிராமங்களைச் சேர்ந்த தீபக் (23), லட்சுமணன், ராஜேந்திர கோலி (32), சுதர்ஷன் (28), துர்கேஷ் (21) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தை உறுதிப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் பிரஹ்லாத் கோண்டே, இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பார்க்கிங் ஒப்பந்ததாரரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
யாத்திரை பாதையில் நடைமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும், இனி இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.