உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் கட்டமாக ரூபாய் 50,000 வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. ஆனால் அதனை அந்த 4 பேரின் மனைவிகளும் எடுத்துக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிவிட்டனர்.

4 பெண்களின் கணவர்களும் ஏன் வீடு இன்னும் கட்டவில்லை என்று மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் அவர்களுக்கு விஷயமே தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓடிப்போன அந்த 4 பேரின் மனைவிகளை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.