கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் தான் சுரேஷ் கோபி. மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மேல்சபை எம்பியாகவும் இருந்தார். கேரளாவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஒரு கூட்டத்தில் சுரேஷ் கோபி பேசியதாவது, மத நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்துபோக வேண்டும் என இறைவனிடம் வேண்டுவேன் என்றார்.

இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆலப்புழாவை சேர்ந்த சுபாஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், கேரளாவில் மதநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக பிரச்சனையை ஏற்படுத்த முயல்வதாகவும், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.