மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்நாத் சிங். இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் முக்க்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்பு சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.