புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக மக்களின் ஆதரவை பெரும் விதமாக தமிழக பாஜக சார்பாக இன்று முதல் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அதன்படி மும்மொழி கொள்கை தொடர்பான பாஜகவின் கையெழுத்து இயக்கம் மற்றும் சம கல்வி இணையதளத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதலாவதாக தமிழிசை சௌந்தரராஜன் சமகல்வி எங்கள் உரிமை என்று எழுதி கையெழுத்திட்டார். இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ் வாழ்க பாரதம் வளர்க என்று எழுதி கையெழுத்திட்டார்.