தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு உழைப்பதில் மட்டும்தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கிறது. இன்று இந்தியாவை மதவாத பாசிச சக்திகள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு இருக்கிறது. தாய்மொழியை அழித்து ஆதிக்க மொழியினை திணிக்க முயற்சி நடக்கிறது.

எந்த ஒரு தனி மனிதரும் சுதந்திர சிந்தனையுடன் வாழ முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தற்போது இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை தெற்கு நோக்கி திரும்பியுள்ளது. இன்றைய திமுக கழகம் தான் இந்தியாவுக்கே வழி காட்ட வேண்டும். மேலும் இன்று ஈரோடு நாளை நம் நாடு. இந்த வெற்றிப் பயணம் இனியும் தொடரும். ஈரோடு கிழக்கு தொகுதியை போன்று இந்தியா முழுவதும் விடியும் என்று கூறினார்.