ஜனவரி 11-ஆம் தேதி அஜித், விஜய் ஆகிய பிரபலங்கள் நடிக்கும் துணிவு, வாரிசு திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளது. வழக்கமாக முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் நடப்பது வழக்கம். ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியே வருவதால் எந்த படத்தை எத்தனை மணிக்கு சிறப்பு காட்சிகள் நடத்துவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை மூலம் அதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடு இரவு 1 மணிக்கு துணிவு பணத்தையும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தையும் தமிழகம் முழுவதும் இருக்கும் தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் சிங்கிள் திரையரங்குகளில் துணிவு படத்தை மட்டும் ரெகுலர் காட்சிகளாக திரையிட ஒப்பந்தம் செய்த தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தையும், வாரிசு படத்தை மட்டும் ரெகுலர் காட்சிகளாக ஒப்பந்தம் செய்ய தியேட்டர்களில் அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தையும் திரையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எப்படி சரியாக வரும் என்பது தெரியாததால் தேவையற்ற மோதல்களை தவிர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.