மதுரையில் நேற்று திமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்களை அமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார். இந்நிலையில் இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு. மக்கள் தவிக்கும் கொடூர ஆட்சியை மறைக்க மத்திய அரசை கண்டித்து தீர்மானம். குறை சொல்ல ஏதும் இல்லாததால் பூச்சாண்டி அரசியல் செய்யும் அவலம்..

வரலாறு காணாத ஊழல் செய்ததால் விசாரணை அமைப்புகளை கண்டு மிரட்சி. சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச தகுதியற்ற திமுகவினர். அதிமுக- பாஜக கூட்டணியால் அச்சத்தில் உறைந்து போயுள்ள திமுக. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சம்மட்டி அடி கொடுக்கப் போகும் தமிழக மக்கள். வரலாற்று வெற்றி பெறப்போகும் அதிமுக- பாஜக கூட்டணி என்று கூறினார்.