
உலகின் பணக்கார கோவிலாக கூறப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.18 கோடியில் 10 எலெக்ட்ரிக் பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் ஒலெக்ட்ரா எனும் நிறுவனம் இந்த பேருந்துகளை நன்கொடையாக வழங்கி உள்ளது.
தேவஸ்தான ஓட்நர்களுக்கு பயிற்சியளித்த பின், இன்னும் 10 நாட்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பேருந்துகளை திருமலை கோவில் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரிடம் பேருந்துகளின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டது.