தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சதா. இந்த படத்திற்கு பிறகு அந்நியன், திருப்பதி, டார்ச் லைட், எலி போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகை சதாவுக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை சதா மும்பையில் Earthings Cafe என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வந்துள்ளார்.

பல வருடங்கள் தன் கடின உழைப்பின் மூலம் ஹோட்டலை பெரிய அளவில் சதா வளர்த்த நிலையில் திடீரென இடத்தின் உரிமையாளர் ஹோட்டலை காலி செய்யுமாறு கூறி இருக்கிறார். இதனால் தன்னுடைய ஹோட்டலை இனி நடத்த முடியாது எனக் கூறி நடிகை சதா நேரலையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ஹோட்டலை மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்றலாமே என்று அட்வைஸ் கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)