சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது.

அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 1 முதல் ஜூன் 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.