இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம் விழுந்த பகுதியில் பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில் அங்கு இருந்த பயிற்சி மருத்துவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்தது. இந்நிலையில் விமான இடங்களில் கட்டுமான தொழிலதிபர் ராஜுபடேல் என்பவர் தனது குழுவினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களை அந்த குழுவினர் சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் மூலம் விரைவாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்பகுதி முழுவதும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சிதறி கிடந்தன. அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட குழுவினர்களுக்கு மொத்தம் 800 கிராம் தங்க நகைகள்(100 பவுன்) மற்றும் ரூபாய் 80 ஆயிரம் ரொக்க பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவை கிடைத்தன.

அதனை பத்திரமாக மீட்டு அகமதாபாத் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த விபத்திலிருந்து மீட்கப்பட்ட நகைகள் ஆவணப்படுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பத்திரமாக ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி உறுதியளித்தார்.