சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.

அப்போது அதே பகுதியில் வசித்து வந்த செந்தில் (40) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் அவரது கணவருக்கு தெரிய வர கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செந்திலுடனான கள்ளத்தொடர்பை நிறுத்திவிட்டு கல்யாண் நகர் பகுதிக்கு வேறு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண் அப்பகுதியில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு செல்லும் போது பழைய கள்ள காதலனான செந்தில் தன்னிடம் மீண்டும் பழகும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இல்லையெனில் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். அதனால் பயந்து போன அந்தப் பெண் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.