
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பகுதியில் முபராக் அலி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் முகமது இர்பான்(24). இவர் கடந்த 6-ம் தேதி தனது உறவனர் வீட்டிற்கு அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரக்கட்டை ஒன்றை தூக்கிய போது மின் கம்பியில் பட்டு தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதை அறிந்த அவரது தந்தை முபாரக் அலி அதிர்ச்சியில் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இந்நிலையில் அன்று இரவே மகனும் உயிரிழந்தார். இருவரும் உயிர் இழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.