
தமிழகத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதாவது பள்ளி களில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படாதவாறு உள் புகார் குழுவை அமைக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
அதன் பிறகு பாலியல் பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் புழக்கங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், அது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் மாணவ மாணவிகள் போதை பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதோடு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து பள்ளிகளில் மாணவ மாணவிகள் மத்தியில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.