
மத்திய பிரதேஷ் மாநிலம் கவலியூரில் அஞ்சலி குஷ்வாஹா(23), லோகேந்திர குஷ்வாஹா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். லோகேந்திரனின் நெருங்கிய நண்பரான கவுரவ் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலிக்கும், கவுரவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் தகாத உறவில் இருந்துள்ளனர். இதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர், கவுரவ் வீட்டிற்கு வருவதை நிறுத்தியுள்ளார். இதனால் அஞ்சலி மற்றும் கவுரவும் சேர்ந்து அவரது கணவரை கொல்ல செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பின்பு அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஞ்சலி மற்றும் கவுரவை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அஞ்சலி கூறியதாவது, தனது கணவனின் கொலையில் கவுரவின் பெயர் தெரியாமல் இருக்க கொலை செய்து 15 நாட்களுக்குப் பிறகு,
அவர் கவுரவை கேரளாவிற்கு வேலைக்காக அனுப்பியுள்ளார். அதோடு இந்த கொலையை செய்வதற்கு அவர் பல குற்றத் தொடர்கள் பார்த்ததும் தெரியவந்துள்ளது. லோகேந்திரனை மது குடிக்க வைத்த பிறகு, அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.