தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த ஒரு நடிகை பற்றிய அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இது குறித்து பயில்வான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருந்ததால் நடிகை நதியா அவருடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டாராம். நதியாவுக்கு கருப்பாக இருக்கும் நடிகர்களை பிடிக்காது. ரஜினிகாந்துடன் மட்டும் சேர்ந்து நதியா எப்படி நடித்தார் என்று கேட்டால் ரஜினி சூப்பர் ஸ்டார் என்பதால் அவருடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் சிக்கல் வந்துவிடும் என்பதால் நதியாவை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்துள்ளனர்.

படங்களில் கட்டிப்பிடிக்க மாட்டேன் முத்தம் கொடுக்க மாட்டேன் ஒட்டி உரசி எல்லாம் நடிக்க மாட்டேன் என நதியா கூறியதால் தான் கமல்ஹாசன் படத்தில் நதியா நடிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார். நதியா தன்னுடன் நடிக்க மத்ததால் அவரை பழி வாங்குவதற்காக நடிகை சோபனாவை தன்னுடைய இரு படங்களில் விஜயகாந்த் நடிக்க வைத்ததாகவும் பயில்வான் கூறியுள்ளார். மேலும் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நதியா தற்போதும் இளமை பொலிவுடன் ஜொலிக்கிறார். நடிகை நதியாவை பற்றி பயில்வான் சொன்ன விஷயம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.