இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரமன் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் காணொலி மூலமாகவும் விசாரணை நடைபெற இருக்கிறது.

இதற்காக உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளையில் காணொலியில் ஆஜராவதை பின்பற்ற வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்குகள் தாக்கல் செய்வதிலும் ஆன்லைன் முறையை பின்பற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரானா பரவலின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.