
திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா காரின் டயர் வெடித்தது. அதில் காரில் பயணித்த அவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை 1 கோடி ரூபாயை முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதோடு பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படுவதாக கூறினார்.