மகாராஷ்டிராவில் ராய்காடு மாவட்டத்தில் சங்கி ஜோரே என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளான பாரதி ஜோரே(20) என்பவரும், சந்தோஷ் நந்த்காவ்கருடன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது, அந்த பெண்ணின் தாயார் பார்த்துள்ளார். இதையடுத்து அவரது தாயார், அந்த பெண்ணை கண்டித்துள்ளார்.

காதல் செய்யக்கூடாது என்றும், திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது காதலுடன் சேர்ந்து அவரது தாயை இரும்பு ராடுகளைக் கொண்டு அடித்துள்ளார். இதில் அந்த பெண்ணின் தாயார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சங்கி ஜோரே உடலை மறைக்க முயன்றுள்ளனர்.

அப்போது அந்தப் பெண்ணின் சகோதரியான சுரேகா ஜோரே இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததால் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு காவல்துறையினர் அந்தப் பெண் மற்றும் அவரது காதலனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.