
இந்திய இந்திய மல்யுத்தத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவரும், ஆறு ஆண்கள் ஒலிம்பிக் பதக்கங்களில் ஐந்து பதக்கங்களில் முக்கிய பங்கு வகித்தவருமான, புகழ்பெற்ற மல்யுத்த பயிற்சியாளரான வினாடிமிர் மெஸ்ட்விரிஷ்விலி(80) கடந்த திங்கட்கிழமை அன்று காலமானார்.
இவர் உடல்நலக் குறைவால் இருந்ததாக இந்திய மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர். சுசில்குமார் 2 முறையும், யோகேஸ்வர் தத், பஜ்ரங் புனியா, ரவி தாஹியா தலா ஒரு முறையும் பதக்கம் பெற்றனர். அவர்களின் பயிற்சியாளராக இருந்தவர் இவர். இந்நிலையில் அவர் கடந்த திங்கட்கிழமை அன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.