
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் கோவளம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு பேர் பயணித்தனர். இந்தக் கார் ஈச்சம்பாக்கம் பகுதியை அடையும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாடு இன்றி அங்குள்ள மின்கம்பத்தின் மீது வேகமாக சென்று இடித்தது. இதனால் கார் நிலைத்தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது.
இதில் காரில் உள்ள நான்கு பேரும் எந்தவித காயமும் இன்றி நொடியில் உயிர் தப்பினர். இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கார் தலைகீழாக கவிழ்ந்து முழுவதுமாக சேதமடைந்தது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மின்கம்பத்தில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.