உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஷிவாலிக் நகர் மற்றும் சிட்குல் பகுதிகளில் பெண்களை குறிவைத்து மேற்கொண்ட சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை, ராணிப்பூர் காவல்துறையினர் கடந்த மே 29-ஆம் தேதி வியாழக்கிழமை இடைவிடாத துரத்தலுக்கு பின் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் பதேரி ராஜ்புதன் கிராமத்தைச் சேர்ந்த அலி கான் மற்றும் பகதராபாத் அலிப்பூரைச் சேர்ந்த குல்னாவாஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 1 கைத்துப்பாக்கி, 2 உயிருள்ள தோட்டாக்கள், 1 கத்தி, திருடப்பட்ட செயின்கள் மற்றும் அவர்கள் திருடுவதற்கு படன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசாரின் தகவலின்படி, மே 20-ஆம் தேதி முதல் சிட்குல் மற்றும் ஷிவாலிக் நகரில் 3 சம்பவங்களில் பெண்கள் தாக்கப்பட்டு, தங்க சங்கிலிகள் பறிக்கப்பட்டன. சந்தேக நபர்கள் சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூர் உளவுத்துறையின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பின்னர் ஒரு தகவலாளரின் உதவியுடன், சின்மயா சவுக் பகுதியில் வாகனங்களை சோதனையிட்டபோது, இருவரும் தப்ப முயன்றனர். குறைந்த நேர துரத்தலுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் எதாவது பெரிய கொள்ளை கும்பலுடன் தொடர்புடையவர்களா என்பதை உறுதிப்படுத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.