இஸ்ரவேலில் பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்த தாக்குதல் போராக மாறி இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதாக கூறினர். இதனால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி அவருக்கு வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவ நிருவாகம் தெரிவித்தது. இதன் காரணமாக நீதித்துறை அமைச்சராக இருந்த யாரிவ் லெவின் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெதன்யாகு பல நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.