பெர்த் நகரில் க்வினானா நெடுஞ்சாலையில், கேனிங் நெடுஞ்சாலை அருகே, வெள்ளிக்கிழமை காலை ஒரு ஆச்சரியமான மற்றும் இதயத்தைத் தொடும் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு வாத்து குடும்பம் பல வழித்தடங்களைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, வாகனங்கள் திடீரென நிறுத்தப்பட்டன.
இதனால், ஆறு கார்கள் சம்பந்தப்பட்ட ஒரு சிறிய மோதல் விபத்து ஏற்பட்டு, பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், இந்த விபத்தில் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது, அதில் வாத்துகள் பாதுகாப்பாக மறுபுறம் செல்வதையும், ஓட்டுநர்கள் பொறுமையாக காத்திருப்பதையும் காண முடிந்தது.
DUCKS ON FREEWAY – KWINANA FREEWAY NORTHBOUND AT CANNING HIGHWAY, COMO
Multiple lanes affected
Motorist out of vehicles
Motorists be aware and be alert
Traffic heavy back to Leach Highwayhttps://t.co/9PVfGLIBPN#perthtraffic #mainroadswa pic.twitter.com/A3RrRNI3FB— Main Roads WA (@Perth_Traffic) October 10, 2025
பயணிகள் ஹாரன் அடிக்காமலோ, பறவைகளை விரட்டாமலோ அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் விரைவில் தீர்க்கப்பட்டு, போக்குவரத்து சீரானது. வாத்து குடும்பத்தை பாதுகாப்பாக காட்டுப் பகுதிக்கு வழிநடத்த, போக்குவரத்து அதிகாரிகள் உதவினர்.
இதற்கு முந்தைய நாளும் இதேபோன்ற ஒரு சம்பவம் லீச் நெடுஞ்சாலையில் நிகழ்ந்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், பெர்த் நகர பயணிகளின் இரக்க குணத்தை நெட்டிசன்கள் பாராட்டினர்.
ஒருவர், “விபத்துக்கு வருந்துகிறேன், ஆனால் இது மனிதநேயத்தின் வெற்றி” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “வாத்துகள் விபத்தை ஏற்படுத்தவில்லை, மோசமான வாகன ஓட்டுதலே காரணம்” என்று கூறினார். “ஆஸ்திரேலியாவின் இந்த அன்பான செயல் அனைத்து உயிர்களையும் மதிக்கிறது” என்று மற்றொரு பயனர் புகழ்ந்தார்.
