
மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவில் அதிகம் வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் 15.66% தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 12.25 சதவீத தொழிற்சாலைகளுடன் குஜராத் இரண்டாம் இடத்திலும், 10.44 சதவீதத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும், 7.54 சதவீதத்துடன் உத்தரபிரதேசம் நான்காவது இடத்திலும், 6.51 சதவீதத்துடன் ஆந்திரா ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 15 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது மிகுந்த பெருமையை தேடி தருவதாக உள்ளது.