தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 12.10 மணி வரை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து மே 7-ம் தேதியோடு மூன்று வருடங்கள் நிறைவடைகிறது. இதன் காரணமாக தற்போது நடைபெற்று அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீடாளர்களை தமிழகத்திற்கு அழைக்கும் விதமாக தமிழக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இதற்கான ஒப்புதலும் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.