தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன்பிறகு நாளை அதாவது மே ஒன்றாம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.