தமிழக நிதித்துறை செயலாளராக இருப்பவர் உதயசந்திரன். இவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இதய அடைப்பை நீக்குவதற்காக சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு இதயத்தில் ஸ்டண்ட் வைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக வேலை பளு காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இனி கடினமான வேலைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.