தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியொருவர், சமூக ஊடகங்களில் ‘ஸ்வீட்டி தெலுங்கு ஜோடி 2027’ என்ற பெயரில் நடத்திய ஆபாச ஒளிபரப்பு மோசடி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக பாலியல் உள்ளடக்கம் கொண்ட நேரடி ஒளிபரப்புகளை அவர்கள் இணையத்தில் பகிர்ந்து, ரூ.500 முதல் ரூ.2,000 வரை கட்டணம் வசூலித்து பலரை ஏமாற்றி வந்தனர்.

இது தொடர்பாக, அவர்கள் பயன்படுத்திய ஸ்டுடியோ போல் மாற்றப்பட்ட வீடு, ஒளிபரப்புத் தளங்கள், கேமரா, மொபைல் போன்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் பேரில், ஹைதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை ஆம்பர்பேட்டையில் உள்ள தம்பதியின் வீடு மீது சோதனை நடத்தியது. வீடு முழுவதும் ஸ்டுடியோ மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.

சுவற்றில் திரைச்சீலைகள், ஒளிவிளக்குகள், ஸ்ட்ரீமிங் கருவிகள் உள்ளிட்டவை இருந்தன. அவர்கள் உருவாக்கிய ஆபாச வீடியோக்கள் மற்றும் நேரடி பாலியல் நிகழ்ச்சிகள் ஆன்லைன் தளங்களில் பிரபலமாகப் பகிரப்பட்டன. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த ஆபாசக் கிளிப்புகள் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டதா? அல்லது இதில் மற்ற நபர்கள் தொடர்புடையார்களா என்பதையும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சமூக ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்பட்ட இந்த வகை நடவடிக்கைகள் மீது கடும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.