ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் லாஹவுல் ஸ்பிட்டி மாவட்டத்தின் சாலைகள் விடுமுறை காலம் என்பதால் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்க விரும்பாத மகேந்திரா எஸ்யூவி கார் ஓட்டுனர் ஒருவர் மாற்றுப் பாதையை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் சிக்கி உள்ளார்.

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக சுற்றுலா பயணி தனது எஸ்யூவி தார் காரை சந்திரா நதி மார்க்கமாக ஓட்டி வந்துள்ளார். இது தொடர்பான காணொளி வைரலான நிலையில் அவருக்கு எதிராக போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

இது குறித்து எஸ்பி மயனக் சவுத்ரி கூறுகையி்ல் இந்த காணொளி வைரலான நிலையில் இனி வரும் காலத்தில் யாரும் இது போன்ற தவறை செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.