மாநாடு திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியை அடுத்து தற்போது தெலுங்கில் இளம் நடிகர் நாகசைதன்யா நடித்து வரும் கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு அவர் தமிழுக்கு வராமல் அப்படியே கன்னடத்திற்கு சென்று கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனிடையே  சுதீப்பின் “விக்ராந்த் ரோணா” ஏற்கனவே ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில், “கப்ஜா” படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் படத்தில் தான் சுதீப் நடிக்கவுள்ளார் என்கிற தகவல் தற்போது கன்னட திரையுலகில் வலுப்பெற்றுள்ளது.