
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஸ்ரீஜித் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் ஸ்ரீஜித்துக்கும் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீஜித்தின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்று நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீஜித்தும், 17 வயது சிறுமியும் இன்று நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.