கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கார்த்திக் மின்சாரத் துறையில் வேலை பார்த்து வருகிறார் ஸ்ருதி கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில் சமீபத்தில் மாமியார் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தி வருவதாகவும் கணவருடன் அமர உடாமல் டார்ச்சர் செய்து வருவதாகவும் வேதனையுடன் தன் தாயாருக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உங்கள் வீட்டில் வாழாவெட்டியாக இருப்பதை விட இறந்து போவது எவ்வளவோ மேல் எனக் கூறிவிட்டு சுருதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினருக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிகிச்சை பலனின்றி செண்பகவல்லி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.