
அனைத்து கல்லூரிகளிலும் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது. வழக்கமாக நீட் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பம் தொடங்கும். ஆனால் தற்போது மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான அவகாசம் வழங்கும் பொருட்டு முன்கூட்டியே ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது.
அதன் பின்னர் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஜூன் 25ஆம் தேதி அதாவது இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது விண்ணப்ப காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.