
உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த தெரு நாய் ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது.
இதனை எதிர்பாராத அவர் நாயிடம் இருந்து சிரமப்பட்டு தப்பியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அந்த நாயை விரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வெறிப் பிடித்து தாக்கிய நாயை பிடிக்க அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்தை எடுத்துக்காட்டியுள்ளதோடு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளது.
A guy attacked by a dog while he was walking outside his house, Gorakhpur UP
pic.twitter.com/4m2WxlqdRq— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 18, 2024