கடந்த 2023-2024-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, “மாற்றுத்திறனாளிகளுக்கான 1200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறினார். இதற்கு முதல்வர் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள்ளதாக தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார்”