
சென்னையில் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா உட்பட 7 நாடுகள் கலந்து கொண்ட நிலையில் மொத்தம் 210 வீரர் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டிகள் மொத்தம் 3 நாட்கள் நடைபெற்ற நிலையில் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா முதலிடத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி 21 தங்கம், 22 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கம் என மொத்தம் 48 பதக்கங்களை இந்தியா குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முதலிடத்தை பிடித்து சாதித்தது.

அதன் பிறகு 9 தங்கம் உள்ளிட்ட 35 பதக்கங்களுடன் இலங்கை இரண்டாம் இடத்தையும், வங்கதேசம் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 7 பேர் பதக்கம் என்றனர். குறிப்பாக தடகள வீராங்கனை அபிநயா 2 தங்கப்பதக்கமும், கணிக்ஷா டீனா ஒரு தங்கப்பதக்கமும், பிரதிக்ஷா யமுனா ஒரு தங்கப்பதக்கமும், ஜிதின் ஒரு வெள்ளி பதக்கமும், லக்சன்யா ஒரு வெள்ளிப் பதக்கமும், கார்த்திகேயன் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். மேலும் பூடான் மற்றும் பாகிஸ்தான் வெறுங்கையுடன் திரும்பியது.