குறைந்த ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களை ஓட்டுநராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசை சுரண்டுவதைப் போன்றது. சொந்த மக்களை அரசு சுரண்டக் கூடாது. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

ஜெயபால் மற்றும் மாரிமுத்து போன்றோர் தொடர்ந்த மனுவில், கல்வித்தகுதியை காரணம் காட்டி தங்களை ஓட்டுநராக நியமிக்க அரசு மறுப்பதாகவும், கோவை மாநகராட்சி, குறைந்த ஊதியம் உள்ள தூய்மைப் பணியாளர்களான தங்களை ஓட்டுநர்களாகப் பயன்படுத்திவிட்டு கல்வித் தகுதியை காரணம் காட்டி ஓட்டுநர்களாக நியமிக்க அரசு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.