
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 16 பேர் படித்து வருகின்றனர். இங்கு சரஸ்வதி என்பவர் தலைமை ஆசிரியராகவும், கிருஷ்ணவேணி என்பவர் உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருக்கும் கழிப்பறைக்கு சென்ற போது 15, 16 வயதுடைய அண்ணன் தம்பி இருவரும் மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டி கற்களைத் தூக்கி வீசியுள்ளனர்.
இதனால் மாணவிகள் அலறியடித்து கொண்டு வகுப்பறைக்குள் சென்றனர். இதுகுறித்து ஆசிரியைகள் சம்பந்தப்பட்ட சிறுவர்களிடம் கேட்டபோது, அவர்கள் ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.