பாமக தலைவர் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் கட்சியினர் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில் இன்று திருவள்ளூரில் பாமக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது, அய்யாவுக்கு இப்போது சுகர், BP எல்லாம் இருக்கிறது. அதனால்தான் நான் சொல்கிறேன் டென்ஷன் ஆகாதீங்க. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். ஒரு மகனாக கட்சியின் தலைவராக நான் செய்கிறேன் என்று கூறினார். ஐயா நீங்கள் வருத்தப்படாதீங்க, கவலைப்படாதீங்க ஏன்னா இது நீங்க உருவாக்கின கட்சி. உங்களுடைய கனவுகளை நாங்கள் நினைவாக்குவோம். உங்களுடைய உழைப்பு சாதாரண உழைப்பு கிடையாது. நீங்கள் இன்று தேசிய தலைவர் என்று கூறினார்.