புது தில்லி, ஆகஸ்ட் 19: சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு ஆண் ரயில் கழிவறையிலிருந்து முகமூடி அணிந்து வெளியே வருவதைத் தொடர்ந்து, உடனடியாக ஒரு இளம் பெண் அதே கழிவறையிலிருந்து வெளியே வருவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது, ஆனால் இதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தபடவில்லை. இந்த சம்பவம் பொது ஒழுக்கம் குறித்து விவாதங்களையும், நகைச்சுவையான கருத்துகளையும் தூண்டியுள்ளது.

இந்த வீடியோவின் சரியான இடம், தேதி மற்றும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை, ஆனால் இது ஆகஸ்ட் 18 அன்று  இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டு, வைரலாகி வருகிறது. வீடியோவில், ஆண் ஒருவர் கழிவறையிலிருந்து வெளியேறிய பின், கதவு மீண்டும் பூட்டப்படுகிறது, சில நிமிடங்களுக்குப் பின் ஒரு பெண் வெளியே வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Kalyug Hun | Vilsan Maurya (@kalyug_hun)

பின்னர் அந்தப் பெண் ரயில் பெட்டியின் கதவு அருகே சென்று நிற்கிறார். இந்த காட்சியை ஒரு பயணி ரகசியமாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சிலர் இதை “வெட்கக்கேடு” என்று கண்டித்தாலும், மற்றவர்கள் “வைல்டு கார்டு என்ட்ரி”, “ரயில்வே இப்போது OYO ஹோட்டலாக மாறிவிட்டது” போன்ற நகைச்சுவைக் கருத்துகளை பகிர்ந்தனர்.

சிலர் இந்த வீடியோ நாடகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர், ஏனெனில் பெண் கேமராவை நேரடியாகப் பார்ப்பது போல் தோன்றுகிறது. இளைஞர்கள் சமூக வலைதளங்களில் உடனடி புகழுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.